#image_title
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.
90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்ஷன் மசாலாப் படங்கள்தான்.
தற்போது அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் பின்வாங்கியது. அதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் ரீமேக் உரிமையைப் பெறாமலேயே அதன் கதையைப் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் சம்மந்தப்பட்ட நிறுவனம் மிகப்பெரிய இழப்பீட்டை லைகாவிடம் கேட்பதாகவும் அது சம்மந்தமான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
அதே போல லைகா நிறுவனமும் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த நிறுவனம் பல ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படத்துக்கே அஜித்துக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அஜித்தே லைகா மேல் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…