ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வேட்டையின் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது. இந்த நிலையில் மீண்டும் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுக்க லைக்கா நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது. இதற்காக ரஜினிகாந்த்திடம் பேசினார்களாம். ஆனால் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்களாம்.

ஏற்கனவே லைக்கா தயாரித்த தர்பார், 2.0, லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் நஷ்டமானது. இதனால் லைக்கா நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அதற்கு ரஜினி இன்னும் பதில் அளிக்கவில்லை.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பார். அதனை முடித்த பிறகு தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைக்கா உடன் இணைந்து அடுத்த படத்தில் நடிப்பாரா என்பது தெரியவரும்.
