ஜெய்ப்பூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நபரை, அந்தப் பெண் வீரத்துடன் எதிர்கொண்டு விரட்டியடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மார்ச் 25-ம் தேதி ஜெய்ப்பூரின் ஜவஹர் சர்க்கிள் பகுதியில், அந்தப் பெண் தனியாகச் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து வந்து திடீரெனத் தாக்கியுள்ளார்.
அந்த இக்கட்டான சூழலிலும் சற்றும் அஞ்சாத அந்தப் பெண், தனது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதுகாக்கவும், தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் அந்தப் பயங்கரவாதியுடன் ஆவேசமாகப் போராடினார். அந்தப் பெண்ணின் அசாத்திய துணிச்சலையும், எதிர்பாராத எதிரடியையும் கண்ட அந்த நபர், நிலைகுலைந்து அங்கிருந்து தப்பியோடினார். ஒரு கர்ப்பிணிப் பெண் காட்டிய இந்த வீரம் காண்போரை வியக்க வைத்துள்ளது.
🚨Jaipur shame :Brave pregnant woman fiercely fought back against a monster 🙏
🏌️Help make this video go viral so the public can report this criminal to the police!
Incident: On March 25, in Jaipur’s Jawahar Circle area, this Monster followed and attacked a pregnant woman.… pic.twitter.com/nJSYv1QwIR
— Ramesh Tiwari (@rameshofficial0) April 12, 2026
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், அந்தப் பெண் காட்டிய துணிச்சலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சமூக விரோதியை அடையாளம் கண்டு காவல்துறையில் பிடித்துக் கொடுக்கப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. குற்றவாளியைத் தேடும் பணியில் ஜெய்ப்பூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
