உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபரும், பக்கத்து மாவட்டமான சித்ரகூட்டைச் சேர்ந்த இளம் பெண்ணும் கடந்த ஓராண்டாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தங்கள் வீடுகளில் பேசி சம்மதம் பெற்று விரைவில் முறைப்படி திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்ட நிலையில், இருவீட்டு பெற்றோர்களும் இவர்களது காதல் விவகாரத்திற்கு பச்சைக்கொடி காட்டாமல் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் இந்த முடிவால் மிகுந்த மனவேதனையடைந்த காதல் ஜோடி, யாருக்கும் தெரியாமல் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதால் ஒன்றாக உயிரை விட முடிவெடுத்து, இருவரும் விஷ அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இச்சம்பவம் குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
