Categories: சினிமா

பணம், நகைகளை வரதட்சணையாக கொடுத்து ரம்யா பாண்டியனை கரம் பிடித்த காதலர்.. காரணம் என்ன தெரியுமா..?

Spread the love

ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.

இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார்.இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் யோகா பயிற்சியாளர் லவல் தவான் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவருடன் சமீபத்தில் தான் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் காதல் திருமணம் குறித்து பலரும் அறியாத தகவலை அவருடைய தாயார் சாந்தி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி ரிஷிகேசில் லவல் தவானிடம் ரம்யா பாண்டியன் தான் முதன் முதலில் ப்ரபோஸ் செய்திருக்கிறார். அவருக்கு பிடித்திருந்தாலும் தன்னுடைய குருஜி ரவிசங்கர் ஓகே சொன்னால்தான் திருமணம் என கூறியுள்ளார் லவல். பிறகு ரம்யா பாண்டியன் ரவிசங்கரிடம் பேசி ஓகே வாங்கிய பிறகு தான் இவர்கள் திருமணம் நடைபெற்று உள்ளது. ரிஷிகேசன் இருவரும் சந்தித்துக் கொண்டதால் அங்கேயே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.
தவான் ரம்யாவின் வீட்டுக்கு கார்த்திகை தீபம் நாளில் வந்த போது திடீரென்று மண்டியிட்டு ரம்யாவின் அம்மாவிடம் நீங்க என்னோட மாமியாரா வருவீங்களா என்று கேட்டுள்ளார். அப்போது பதில் சொல்ல முடியாமல் திணறிய ரம்யாவின் அம்மா, அவர் தன் பெண்ணை பாசத்தோடு பார்த்துக் கொள்வதை பார்த்து சம்மதம் தெரிவித்துள்ளார். தவான் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் வழக்கப்படி பெண்கள் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை எதுவும் வாங்க மாட்டார்கள். அதற்கு மாறாக பெண் வீட்டாரருக்கு மாப்பிள்ளை வீட்டார் தான் வரதட்சணை கொடுப்பார்கள்.
அதனால் ரம்யா பாண்டியனுக்கு பெரும் தொகையை வரதட்சணையாக கொடுத்தது மட்டுமல்லாமல் நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் திருமண செலவுகளையும் தாங்களை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர். ஆனால் ரம்யா பாண்டியன் குடும்பத்தினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான செலவை ஏற்று சென்னையில் பிரமாண்டமாக அதனை நடத்தி முடித்தனர். அதேசமயம் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு முதல் முதலில் ரம்யா பாண்டியன் கேசரி செய்து கொடுத்தாராம். இதனால் இம்ப்ரஸ் ஆன ரம்யா பாண்டியன் மாமியார் தனது மருமகளுக்கு ஒரு லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இந்த தகவலை ரம்யா பாண்டியனின் தாயார் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago