தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் முதன்முதலில் வங்கியில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக குறும்படங்களை இயக்கத் தொடங்கினார். அதன்பிறகு ஒரு கதையை உருவாக்கி பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார். யாரும் அவரது கதையை எடுப்பதற்கு முன்வரவில்லை பின்னர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷியும் அவரது கதையையும் நம்பி படம் தயாரிக்க ஒப்புக்கொண்டது.
அப்படி உருவான திரைப்படம் தான் மாநகரம். அழகான திரைக்கதையை குறைவான பட்ஜெட்டில் அமைத்து ரசிகர்களை கவர்ந்தார். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனார். அதன்பின்னர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். ஒரே இரவில் நடக்கும் ஒரு கதைக்கு மிகவும் சிறப்பான கதை அம்சத்தை கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.
அதைத் தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படம் ,கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ திரைப்படம் போன்றவற்றை இயக்கி மிகவும் பிரபலமானார். லோகேஷின் படங்களை ‘லோகேஷ் யுனிவர்ஷ்’ என ரசிகர்கள் கூறத் தொடங்கினார்கள். அந்த வகையில் தற்போது லியோ திரைப்படமும் எல் சிவில் இணைகிறதா? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். விஜய் வைத்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த திரைப்படம் கட்டாயம் வெற்றி பெறும் என பலரும் நம்பி காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ் தனது குடும்பத்தை பற்றி பேசி இருந்தார். அதாவது தான் 20 வருடங்களாக சரியாக வீட்டிற்கு செல்லவில்லை என்றும், ஏதாவது பண்டிகை மற்றும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மட்டுமே சென்று வருவதாக தெரிவித்தார். மேலும் தான் வேலையை விட்டு வந்தபோது பலரும் வருத்தப்பட்டதாக கூறினார். பொதுவாக நான் என்ன செய்கிறேன் என்பதை தனது பெற்றோரிடம் கூறமாட்டேன். அதனால் அவர்களும் தன்னிடம் கேட்டுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். தற்போது கட்டாயம் என்னை நினைத்து அவர்கள் பெருமைப்படுவார்கள் என கூறினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…