தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது அரையாண்டு விடுமுறை முடிந்த உடனே மீண்டும் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி மாணவர்களை குஷிப்படுத்தியுள்ளது. பள்ளிகள் திறந்த உடனே மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 2 மாவட்டங்களுக்கு ஜனவரி 7ஆம் தேதி இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கும் இன்று ஜனவரி 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
