தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு ஜூலை-7 உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 5, 2025

Spread the love

பொதுவாக முக்கியமான விழாக்கள், நிகழ்வுகளின் போது அந்தந்த மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.