காலையிலேயே குட் நியூஸ்..! தமிழகத்தில் கடன் வட்டி தள்ளுபடி… தமிழக அரசு அறிவிப்பு..!!

By Soundarya on ஆவணி 27, 2025

Spread the love

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கிவிட்டு தவணை கட்டத் தவறியவர்களுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்து தமிழாக அரசு உத்தரவிட்டது. வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்ட தவறியதால் அபராத வட்டி அதிகமாகி அதோடு சேர்த்து கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ளது.

இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். தள்ளுபடி போக மீதித் தொகையை பயனாளர்கள் விரைவில்  செலுத்துமாறு சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்நத கலெக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தவணையை செலுத்துவதற்கான கால அவகாசம் 2026 மார்ச் 31 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.