நம் நாட்டில் சமீப காலமாகவே பெரியவர் முதல் சிறியவர் வரை மொபைல் போனிற்கு அடிமையாகி வருகின்றன . முக்கியமாக ஆன்லைன் விளையாட்டுகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தற்கொலை, கொலை இது போன்ற சம்பவங்கள் ஏதோ ஒரு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது, புதிதாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆன்லைன் விளையாட்டில் அடிமையான 18 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மனதை பாதிக்கிறது. சமீபகாலத்தில் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் தடைச்செய்ய பாராளுமன்றத்தில் உத்தரவிட்டது.
இருப்பினும் லக்னோவில் 12 ஆம் வகுப்பு மாணவன் அவனது வீட்டில் நேற்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளான். இதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மாணவன் இறப்பதற்கு முன்பு பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளான்.
அக்கடிதத்தில் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை எவ்வளவு முறை முயற்சி செய்தும் ஆன்லைன் விளையாட்டில் இருந்து வெளிவர முடியவில்லை , நான் ஆன்லைன் கேம் விளையாடுவதை குறித்து நீங்கள் அனைவரும் வருத்தப்படுகிறீர்கள், என்னால் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனக்கு பயமாக இருக்கிறது , எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை . நான் இறந்த பிறகு பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உருக்கமாக எழுதியுள்ளார். ஆன்லைன் விளையாட்டு அடிமையான இளைஞர் எடுத்த தவறான முடிவு இச்சம்பவம் ஆன்லைன் விளையாட்டில் அடிமையானவர்களுக்கு உதாரணமாக இருக்கும்.
