தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுப்பதையும், அவசர காலங்களில் விரைந்து உதவுவதையும் இச்சிறப்புப் படை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முக்கிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ₹354 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இத்திட்டத்தைக் கடந்த ஜூன் 9-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த, பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதில் இச்சிறப்பு அதிரடிப்படை முக்கியப் பங்காற்றி வருகிறது
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…