பெண்களின் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் படை ..! மேலும் 18 போலீசார் நியமனம்.. தமிழ்நாடு காவல் துறை அதிரடி உத்தரவு..!!

Spread the love

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’ பிரிவுக்கு, கூடுதல் பலமாக 2 உதவி ஆய்வாளர்கள் (SI) உட்பட மேலும் 18 காவல் துறையினர் பணியிட மாற்றம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நியமனங்களுக்கான உத்தரவை தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அலுவலகம் பிறப்பித்துள்ளது. இச்சிறப்புப் படையின் காவல் துறை கண்காணிப்பாளர் (IGP) விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நியமனங்களில் குறிப்பாக, சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த 2 உதவி ஆய்வாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் இணையவழி குற்றப் புலனாய்வில் நிபுணத்துவம் பெற்ற இவர்களின் வருகை, பெண்களுக்கு எதிரான ஆன்லைன் குற்றங்களை விரைவாகக் கண்டறிய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய தலைமைக் காவலர் மற்றும் முதல் நிலைக் காவலர் ஒருவரும், ஆவடி, கோவைப்புதூர், உளுந்தூர்ப்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைகளைச் சேர்ந்த காவலர்களும் இப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’யின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதே இந்த நியமனங்களின் முக்கிய நோக்கமாகும். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 18 போலீசாரும் உடனடியாகப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, சிங்கப்பெண் சிறப்புப் படையின் ஐஜிபி (IGP) முன்னிலையில் உடனடியாகப் பணியில் இணையுமாறு அந்தந்தத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

“வெறும் 40 ரூபாய்க்காக இப்படியா?”.. பெண் பயணியை காரில் பூட்டி அறைந்த ஊபர் டிரைவர்… இணையத்தை உலுக்கும் பெண்ணின் வீடியோ வாக்குமூலம்..!!

மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…

3 minutes ago

ஐயோ டாய்லெட்ல என்ன இது?… கமோடிற்குள் இருந்த விசித்திர உருவம்.. உள்ளே எட்டிப்பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அலறியடித்த குடும்பம்..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…

9 minutes ago

“லவ் பண்ணது ஒரு குத்தமாயா?”.. ராணுவ சீருடையில் காதல் ப்ரோபோஸ்.. கேப்டனுக்கு அனுப்பப்பட்ட ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்.. ராணுவம் எடுத்த விபரீத முடிவு..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…

12 minutes ago

மின்சார வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.. முக்கிய நபர் அதிரடி கைது.. பகீர் வாக்குமூலம்..!!

தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…

22 minutes ago

கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்… ஒரே ஒரு கிராம்பால் 6 மாதக் குழந்தையின் மூச்சு நின்று மரணம்.. உ.பி.யில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…

25 minutes ago

“திசை திருப்ப நாடகமா?”.. ஹார்டு டிஸ்க் விவகாரத்தில் வெடித்த செந்தில் பாலாஜி.. பின்னணியில் இருக்கும் நிஜ காரணம் இதுதான்..!!

மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும்…

32 minutes ago