Categories: சினிமா

சூர்யாவின் இரண்டு படங்களைப் பேசி பேசியே காலி பண்ணிய இருவர்… ரசிகர்கள் கருத்து!

Spread the love

2015 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தைத் தெளிய வைத்து தெளிய வைத்து அடித்தனர் சோஷியல் மீடியாவினர். பாட்ஷா கதையை உல்டா பண்ணி எடுத்துவிட்டு இயக்குனர் லிங்குசாமி ப்ரமோஷன்களில் கொடுத்த பில்டப்புகளை நம்பி வந்த ரசிகர்களுக்கு அஞ்சான் படம் வதைமுகாமாக அமைந்தது.

அந்த கடுப்பில் படத்தை கேலி செய்து மீம்களாக பறக்கவிட்டன. பட ப்ரமோஷனில் லிங்குசாமி பேசிய ‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கிருக்கேன்’ என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே லிங்குசாமியின் சினிமா கேரியரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அவரால் ஒரே ஒரு ஹிட் கூட கொடுக்க முடியவில்லை.

அஞ்சான் படத்துக்கு ஓவர் ஹைப் கொடுக்காமல் இருந்திருந்தாலே அந்த படம் இந்தளவுக்கு தாக்கப் பட்டிருக்காது. ஆனால் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகள்தான் படத்தின் குறைகளைப் பூதாகரமாக ஆக்கி ரசிகர்களை வெறிகொண்டு தாக்கவைத்தது. இதனால் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய ப்ளாப்பாக அமைந்தது அஞ்சான்

#image_title

இப்போது பத்து ஆண்டுகள் கழித்து லிங்குசாமி செய்த அதே வேலையை செய்து கங்குவா படத்தை ரசிகர்கள் வெறுக்கும் அளவுக்கு ஆக்கிவிட்டார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. படம் ஆரம்பித்ததில் இருந்து அவரும் தனஞ்செயனும் கொடுத்த  பில்டப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்தியாவே பார்க்காத படம், பாகுபலிக்கு சவால் என்றெல்லாம் பேசிப் பேசியே ரசிகர்களுக்குப் படத்தை திகட்டவைத்தனர்.

இதற்கெல்லாம் உச்சம் வைத்தது போல “வெற்றிவிழா குறித்து ரிலீஸூக்கு முன்பே பேசியது, 2000 கோடி வசூல் எதிர்பார்க்கிறேன் என சொன்னது,  கங்குவா பார்ட் 2 வரும்போது அதனோடு போட்டி போட யாருமே வரமாட்டார்கள் என்றெல்லாம் பேசியதற்கு’ இப்போது மொத்தமாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார் ஞானவேல் ராஜா. இப்படி சூர்யாவின் கூடவே இருந்து பில்டப் கொடுக்கிறேன் என்று அவரின் இரண்டு படங்களைக் காலி பண்ணிவிட்டார்கள் என்று சூர்யா ரசிகர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

7 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

7 மணத்தியாலங்கள் ago