ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த 17 வயதுடைய பிரின்ஸ் சோனி என்ற மாணவன், கடந்த புதன்கிழமையன்று பள்ளி உணவகத்தில் உணவு அருந்தியுள்ளார். சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலேயே அந்த மாணவர் பள்ளி வளாகத்திற்குள்ளேயே திடீரென சுருண்டு விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
மயக்கமடைந்த மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்காமல், பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு மட்டுமே தகவல் தெரிவித்து பள்ளியிலேயே காலதாமதம் செய்துள்ளது. பதறியடித்துக்கொண்டு பள்ளியை அடைந்த பெற்றோர், தங்கள் மகனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவனின் திடீர் மரணத்திற்கான உண்மையான காரணம் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…