சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சில நேரங்களில் ஒரு சிறிய விஷயம் கூட பெரிய ஆபத்தில் முடிந்து விடுகிறது. அதன்படி கேரளாவில் சிறுவன் ஒருவன் செய்த தவறு மிகப்பெரிய சோகத்தில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பள்ளி சிறுவன் ஒருவன் தனது வீட்டிற்குள் வந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அந்த சமயத்தில் திடீரென்று அவன் விளையாடிக் கொண்டிருந்த பந்து சாலையில் உருண்டு ஓடுகிறது. எதிரே வண்டி ஒன்று வந்து கொண்டிருந்ததால் சிறுவன் அப்படியே தனது பாட்டியுடன் வீட்டுக்குள்ளே நின்று விட்டான். ஆனால் அந்த பந்து வாகன ஓட்டி மீது மோதிய நிலையில் நிலை தடுமாறிய அவர் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினாலும் தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
