1000 பேருக்கு மேல ஆள வைச்சு பாட்டு எடுத்தா போதாது…! செய்ய வேண்டியதை coorect-ஆ செய்யணும்… லியோ பாட்டால் எழுந்த சர்ச்சை…!

By Begam

Published on:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

   

இத்திரைப்படம்  வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் ஆரம்பித்த நாள் முதலில் இருந்து எப்போது ரிலீஸ் ஆகும் என்ன ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருகின்றனர் .லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  அனால் போலியாக டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து அக்டொபர் 5 ஆம்  தேதியான இன்று லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  நா ரெடி தான் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு கிட்டத்தட்ட 1000 பேருக்கும் மேல் நடனமாடி உள்ளனர். இவர்களில் ரியாஸ் என்ற டான்சர் தற்பொழுது ‘ தன்னுடைய id கார்டை காண்பித்து, நா ரெடி தான் பாடலுக்கு நடனமாடி 4 மாதங்களுக்கு மேலாகியும் தங்களுக்கு வரவேண்டிய சம்பளம் வரவில்லை எனக்கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இன்று லியோ ட்ரைலர் வெளியாக உள்ள நிலையில் அவர் வெளியிட்ட இந்த வீடியோவானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

author avatar