ஃபதேபூர் மாவட்டம் மலாவ்ன் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணிற்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அந்தப் பெண்ணிற்கு அதே பகுதியைச் சேர்ந்த அண்டை வீட்டு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் தனது நான்கு குழந்தைகளையும் கணவரையும் தவிக்கவிட்டுவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் ஊரை விட்டு ஓடிவிட்டார்.
தனது மனைவி அண்டை வீட்டுக்காரருடன் ஓடிவிட்டதை அறிந்த கணவன் மிகுந்த அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். மனைவியைத் தேடி அலைந்த அவர், ஒரு இடத்தில் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் ஒன்றாக இருப்பதைக் கண்டு ஆவேசமடைந்தார். தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, மனைவி மற்றும் அவரது காதலன் மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனால் அந்த இடத்தில் பெரும் பதற்றமும் அலறல் சத்தமும் ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் அவரது கணவரைக் கைது செய்தனர். நான்கு குழந்தைகளின் எதிர்காலத்தை நினையாமல் தாய் கள்ளக்காதலனுடன் ஓடியதும், ஆத்திரத்தில் கணவன் பெட்ரோல் ஊற்றியதுமான இந்த ‘முக்கோண காதல்’ விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
