பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நடிகர் விஜயகாந்த் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக சாப்பாடு போட்ட முதல் நடிகர் விஜயகாந்த் தான். விஜயகாந்த் இளைய மகனான சண்முக பாண்டியன் சகாப்தம் திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு மதுர வீரன் திரைப்படத்தில் நடித்தார். அந்த படமும் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த் இறந்த போது அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் கேப்டனுக்காக சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நான் நடித்துக் கொடுப்பேன் என வீடியோ வெளியிட்டார். தற்போது சண்முக பாண்டியன் படைத்தலைவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

லாரன்ஸ் வாக்கு கொடுத்ததால் படைத்தலைவன் படத்தில் அவருக்கென ஒரு கேமியோ ரோல் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் பட குழுவினர் பல நாட்களாக ராகவா லாரன்ஸ்காக காத்து கொண்டிருந்தனர். ஆனால் இன்னும் கால்ஷீட் கிடைக்காததால் படக்குழுவினர் அவர் இல்லாமலேயே படத்தை எடுத்து முடித்து விட்டனர். இந்த மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் புல்லட் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திலும் ராகவா லாரன்ஸ் நடித்துக் கொடுப்பதாக இருந்தது. நீண்ட காத்திருப்பதற்கு பிறகு ராகவா லாரன்ஸ் எப்படியோ புல்லட் பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். நடிகர் விஜயகாந்த் பிறருக்காக எதையும் செய்பவர். அப்படி இருக்க அவரது இறப்பில் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நடித்த கொடுப்பதாக லாரன்ஸ் வாக்கு கொடுத்தார். இப்போது சொன்ன வார்த்தையை காப்பாற்றாமல் இருப்பது நியாயமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

