தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரசிகர்களால் போற்றப்படும் மிகப்பெரிய நடிகர். மக்களால் இப்போதும் கொண்டாடப்படுவதால் 73 வயதில் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு படத்தில் நடிக்க 120 கோடி சம்பளம் வாங்குகிறார். பெயர், புகழ், செல்வாக்கு, மரியாதை என ஒரு உச்சத்தில் இருப்பவர்தான் ரஜினி. அப்படிப்பட்ட ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு கோர்ட் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
அதனால் கோர்ட்டுக்கு போன லதா ரஜினிகாந்த், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். வெயிலுக்கு அவர் தலையில் முக்காடு போட்டு சென்றதாகவும், முக்காடு போட்டுக்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு சென்றதாக மீடியாக்கள் எழுதியதாக, லதா ரஜினிகாந்த் பிறகு, சென்னையில் பிரஸ்மீட் வைத்து வருத்தப்பட்டார். இந்த சம்பவத்துக்கு காரணம் சவுந்தர்யா ரஜினிகாந்த் தான்.
ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், 10 ஆண்டுகளுக்கு முன் கோச்சடையான் என்ற படத்தை டைரக்ட் செய்தார். ரஜினியே இருக்கும்போது அவர் நடிக்காமல் கார்டூனாக எடுக்கப்பட்ட இந்த படத்தை ரசிகர்கள் பார்க்காமல் படம் மாபெரும் பிளாப் ஆனது. இந்த படத்துக்காக பெங்களூவை சேர்ந்த அபீர்சந்த் என்பவரிடம் இருந்து 6 கோடி ரூபாயை, முரளி என்பவர் வாங்கியுள்ளார். இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கையெழுத்து போட்டுள்ளார். கோச்சடையான் படம் தோல்வி அடைந்ததால், முரளி பணத்தை திருப்பி தராமல் ஓட்டம் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரூ. 6 கோடி கொடுத்த அபீர்சந்த், லதா ரஜினிகாந்திடம் உத்தரவாதம் கையெழுத்து போட்ட நீங்கள்தான் பணத்தை தர வேண்டும் என்று கேட்க, லதா மறுத்துவிட்டார். இதையடுத்து அபீர்சந்த் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவருகிறது. பலமுறை அழைத்தும் கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் இந்த முறை லதா ரஜினிகாந்துக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் நேர்காணலில் கூறுகையில், ரஜினி மிகப்பெரிய நடிகர். நல்ல மனிதர். 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவருக்கு ரூ. 6 கோடி ரூபாய் பெரிது அல்ல, அப்போதே தந்து பிரச்னையை முடித்திருக்கலாம். அவரது மகள் சவுந்தர்யாவின் வேண்டாத வேலையால், இப்படி ரஜினியின் பெயரை, புகழை அவரது குடும்பத்தினரே கெடுக்கின்றனர். அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர், என தெரிவித்துள்ளார்,
தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன்…
தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.…
நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…
தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…