BREAKING: மரணத்திலும் வாழும் மனிதநேயம்…. கண்ணீர் அஞ்சலிக்கு நடுவே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…. கண்தானம் செய்த பாக்யராஜ்…!

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், திரைக்கதை மன்னனுமான கே.பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், அவர் ஏற்கனவே கண்தானம் செய்ய ஒப்புதல் அளித்திருந்த உன்னதத் தகவல் வெளியாகியுள்ளது. மரணத்திற்குப் பின்பும் இருவருக்கு ஒளியேற்ற வேண்டும் என்ற அவரது இந்த உயரிய நோக்கம், அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இதனையடுத்து, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் உடலிலிருந்து கண்களைப் பாதுகாப்பாக எடுப்பதற்காகச் சென்னை அரசு கண் மருத்துவமனையின் பிரத்யேக மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்து வந்துள்ளனர். தற்போது அதற்கான மருத்துவ ஏற்பாடுகள் இல்லத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரையுலகில் தன் தனித்துவமான கதைகளின் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றிய இயக்குநர் பாக்யராஜ், தற்போது தன் மரணத்தின் மூலமும் பிறர் வாழ வேண்டும் என்று செய்துள்ள இந்த கண்தானச் செயல், திரையுலகினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெஞ்சாரப் பாராட்டுகளையும் மரியாதையையும் பெற்று வருகிறது.

Nanthini

Recent Posts

செந்தில்பாலாஜிக்கு விஜய் வைத்த மெகா செக்… அதிரடி முடிவால் அலறும் திமுக… தவெக அரசின் அடுத்த மாஸ்டர் பிளான்…!

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு எதிராக முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத்…

7 minutes ago

யாருமே எதிர்பார்க்காத திடீர் மரணம்…. பாக்யராஜ் மறைவு… சாந்தனுவுக்கு ஆறுதல் சொல்ல ஓடோடி வந்த CM விஜய்…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், 'திரைக்கதை மன்னர்' என்று போற்றப்படுபவருமான பாக்யராஜ் அவர்களின் திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும், குறிப்பாக…

22 minutes ago

“அதிமுக, காங்கிரஸைத் தொடர்ந்து திமுகவிற்கு அடுத்த மரண அடி! வைகோ எடுத்த அந்த ஒற்றை முடிவு… பின்னணியில் இருக்கும் பகீர் ரகசியம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் திருப்பமாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது. சென்னை அண்ணாநகரில்…

22 minutes ago

40 ஆண்டுகால நட்பு… திரைக்கதை மன்னனின் மறைவால் நிலைகுலைந்து போன சூப்பர்ஸ்டார்… நண்பனின் உடலை பார்த்து கலங்கிய ரஜினி…!

தமிழ் திரையுலகின் மாபெரும் இயக்குநரும் திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த சினிமா உலகையும் பெரும் சோகத்தில்…

29 minutes ago

“டெல்லியில் இனி இவர்தான் எல்லாமே”…. முதல்வர் விஜய் வெளியிட்ட அந்த ஒற்றை அரசாணை…. கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்… அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த நச்சுனு பதில்…!

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளரும்,…

31 minutes ago

வீட்டுக்குள்ளேயே வெடித்த டைம் பாம்… நச்சுப் புகையால் மூச்சுத்திணறி தந்தை மரணம்… மகன் நிலைமை?… தடயவியல் சோதனையில் வெளியான பகீர் உண்மை…!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள சக்ரதர் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டின் ஜன்னல் ஏசி கம்ப்ரெஸர் திடீரென பயங்கர…

33 minutes ago