விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.
இதுமட்டுமின்றி ஏழை மக்களுக்காக தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இதுவரை தன் சொந்த காசில் பல ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு உணவு, குடிநீர் இல்லாமல் தவித்த போது ஓடோடி சென்று உதவினார். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை தனது சொந்த காசில் வழங்கி இருந்தார்.
இப்படி ஏழை எளிய மக்களுக்கு ஓடி ஓடி தனது சொந்த காசை கொண்டு உதவி செய்து வரும் இவரை மக்களும், திரைபிரபலங்களும் மனதார பாராட்டி வருகின்றனர். இவரைப்போலவே நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் ஊனமுற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை பல வருடங்களாகவே செய்து வருகிறார். இது நமக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நிலையில் விஜய் டிவி புகழ் பாலா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து மாற்றுத் திறனாளி குழந்தைகளை வைத்து கஷ்டப்படும் ஏழை குடும்பத்திற்கு பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். தற்பொழுது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இருவரின் நல்ல மனதையும் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram