சிரமத்தோடு தவிக்கும் மலைவாழ் மக்களுக்கு உதவிய kpy பாலா… கருணை வள்ளலுக்கு குவியும் பாராட்டுக்கள்…!

By Soundarya on கார்த்திகை 11, 2024

Spread the love

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் பாலா தனது காமெடி மூலமாக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த பாலா தற்போது பல நெகிழ்ச்சியான சம்பவங்களை செய்து வருகிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார்.

என்ன இவ்வளவு உதவி செய்யுறார்.. பாலா இப்போ செஞ்சிருக்க உதவி தெரியுமா?..  குவியும் வாழ்த்து | KPY Bala has helped a Physically Challenged person by  providing a three-wheeler - Tamil ...

   

தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்ய யோசனை செய்யும் நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை தனக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு தானதர்மம் செய்து வருவதை முழு நேரமும் வேலையாக வைத்திருக்கின்றார் பாலா

   

 

மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது என பாலா செய்த உதவிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரன்ஸ் மாற்றம் என்னும் சேவையை தொடங்கினார். இந்த சேவையில் KPY பாலா எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்தனர். அவர்கள் மட்டுமில்லாமல் சிறு வயது முதலே லாரன்ஸ் ஆல் வளர்க்கப்பட்டவர்களும் இப்போது மாற்றம் சேவையில் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலா மலைவாழ் கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். இந்த விடியோவை பாலா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு வாழ்த்துக்க குவிந்துஹ் வருகிறது.