தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு அண்ணாமலை பா.ஜ.க.வில் இருந்து விலகி, “வி தி லீடர்ஸ்” என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கத்தில் குறுகிய காலத்திலேயே 17 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ள நிலையில், தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இதில் தொடர்ந்து தங்களை இணைத்து வருகின்றனர். அந்த வகையில், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க. மாநிலச் செயலாளருமான அமர் பிரசாத் ரெட்டி, தற்போது பா.ஜ.க.வில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தான் பிறப்பால் தெலுங்கர் என்றாலும், தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து பாடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணையவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தின் எதிர்கால அரசியல் போட்டி என்பது அண்ணாமலைக்கும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் இடையில் மட்டும்தான் இருக்கும் என்றும் அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…