கேரள மாநிலம் அதிகமாக மக்களால் விரும்பப்படும் ஒரு மாநிலமாக திகழ்கிறது .கேரள மாநிலத்தில் நீர்நிலைகளும் அதனை சுற்றியுள்ள பசுமை நிறைந்த இடங்களும் கேரளாவிற்கு ஒரு அழகை தருகிறது. மேலும் கேரளாவில் அமைந்துள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு பெறும் விளைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்குள்ள முண்டக்கை என்ற கிராமமே நிலச்சரிவில் சிதைந்துள்ளது.
இந்த நிலச்சரிவில் 350 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து நிலச்சரிவில் தப்பி மீட்கப்பட்ட மக்களை நிவாரணம் அளிக்கப்பட்டு தனியான இடத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலச்சரிவிற்கு அனைத்து பிரபலங்களும் பொது நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள பிரபல நடிகர்களான மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் இருவரும் சுமார் 35 லட்சத்தை வயநாடு மக்கள் இயல்பு வாழ்க்கையை திரும்புவதற்கு உதவியாக அளித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நஸ்யா மற்றும் பகத் பாஸில் தம்பதியினர் தனது கேரளா நாட்டிற்காக 20 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளகள். தமிழ் திரை உலகத்தை சேர்ந்த விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.மேலும் நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகியோர்சுமார் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
மேலும் கேரளாவின் துயரை போக்குவதற்கு ராஷ்மிகா மந்தானா ரூபாய் பத்து லட்சம் அளித்துள்ளார். ஆகையால் இது போன்ற திரையுலக பிரபலங்கள் தானே முன்வந்து உதவுவது கேரள அரசிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவரவர்களால் முடிந்த உதவியை செய்து நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…