கேரள மாநிலம் அதிகமாக மக்களால் விரும்பப்படும் ஒரு மாநிலமாக திகழ்கிறது .கேரள மாநிலத்தில் நீர்நிலைகளும் அதனை சுற்றியுள்ள பசுமை நிறைந்த இடங்களும் கேரளாவிற்கு ஒரு அழகை தருகிறது. மேலும் கேரளாவில் அமைந்துள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு பெறும் விளைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்குள்ள முண்டக்கை என்ற கிராமமே நிலச்சரிவில் சிதைந்துள்ளது.
இந்த நிலச்சரிவில் 350 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து நிலச்சரிவில் தப்பி மீட்கப்பட்ட மக்களை நிவாரணம் அளிக்கப்பட்டு தனியான இடத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலச்சரிவிற்கு அனைத்து பிரபலங்களும் பொது நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள பிரபல நடிகர்களான மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் இருவரும் சுமார் 35 லட்சத்தை வயநாடு மக்கள் இயல்பு வாழ்க்கையை திரும்புவதற்கு உதவியாக அளித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நஸ்யா மற்றும் பகத் பாஸில் தம்பதியினர் தனது கேரளா நாட்டிற்காக 20 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளகள். தமிழ் திரை உலகத்தை சேர்ந்த விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.மேலும் நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகியோர்சுமார் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
மேலும் கேரளாவின் துயரை போக்குவதற்கு ராஷ்மிகா மந்தானா ரூபாய் பத்து லட்சம் அளித்துள்ளார். ஆகையால் இது போன்ற திரையுலக பிரபலங்கள் தானே முன்வந்து உதவுவது கேரள அரசிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவரவர்களால் முடிந்த உதவியை செய்து நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…