பிரபல நடிகரான ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் 2 மகன்களைப் பிரிந்து வாழ்கிறார். ரவிமோகன் ஆர்த்தியை பிரிவதற்கு கெனிஷா தான் காரணம் என சோசியல் மீடியாவில் தகவல் உலா வந்தது. சமீபத்தில் ரவி மோகன் தனது பெயரில் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த விழாவில் கெனிஷாவை ரவி மோகன் புகழ்ந்து பேசி இருந்தார்.
சமீபத்தில் கெனிஷா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் தாய்மார்கள் அனைத்தையும் சுலபமாக்கி விடுகின்றனர். தாய்மார்கள் உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் அழகாக காண்பிக்கின்றனர். என் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன். நான் இவ்வளவு வளர்ந்து இருப்பதை பார்த்தால் உங்களுக்கு பிடித்திருக்கும் என பதிவிட்டு இருந்தார்.
மேலும் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என குறிப்பிட்டு இருந்ததால் பலரும் கெனிஷா கர்ப்பத்தை அறிவிக்கப் போகிறாரா என கமெண்ட் செய்து வந்தனர். அதற்கு பதிலளித்த கெனிஷா என் கடைசி ஸ்டோரியை பார்த்துவிட்டு நான் கர்ப்பமாக இருக்கிறேனா என கேட்கிறார்கள். இல்லை. என்னை பாருங்கள் என்று வயிற்றை தடவி காண்பித்து விட்டு, சாப்பாடு மட்டும்தான் உள்ளே செல்கின்றது. நான் குறிப்பிட்டது வேறு ஒரு அறிவிப்பு பற்றி என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
