நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக அது திருமணம் குறித்த வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கின்றார்
மலையாளத்தில் முதன் முதலாக நடித்து அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.
அதை தொடர்ந்து சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார். தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வளம் வந்த இவருக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் அந்த அளவுக்கு அமையவில்லை. தெலுங்கில் இவர் நடித்த மகாநடி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது.
இருப்பினும் அடுத்தடுத்து திரைப்படங்கள் இவருக்கு சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார். இருப்பினும் தனது கையில் அரை டிசைன் படங்களை வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்து இருந்தார்.
கீர்த்தி சுரேஷ் குறித்த திருமண வதந்திகள் வருவது இது முதல் முறை அல்ல நிறைய முறை வதந்திகள் வந்துள்ளது. கடந்த காலங்களில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த பல செய்திகளை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் மறுபடியும் அப்படியான ஒரு வதந்தி பரவி வர அதற்கு தனது பதிலை தெரிவித்து இருக்கின்றார் கீர்த்தி சுரேஷ்.
நான் இது போன்ற வதந்திகளுக்கு பதில் சொல்வதையே நிறுத்தி விட்டேன். என்னுடைய தேர்வு படங்கள் மட்டும் தான். என் நடிப்பு மீதான விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எனது குடும்பத்தை பற்றி யார் கருத்து சொன்னாலும் அது பற்றியே கவலையும் கிடையாது. அது தேவையும் கிடையாது. அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்களின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்று பதிலளித்திருக்கின்றார் கீர்த்தி சுரேஷ்.
