#image_title
நடிகை ஆனந்தியும் தனது முதல் இயக்கத்தில் இயக்குனர் குபேந்திரன் காமாட்சியுடன் கைகோர்த்துள்ளார். மங்கை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் பேனரின் கீழ் ஏஆர் ஜாபர் சாதிக் தயாரித்து உள்ளார்கள். பெண்களைப் பற்றிய ஒரு நாடகப் படமாக இருக்கும் இந்த படத்தின் உண்மையான பார்வையாளர்கள் ஆண்களே என்று இயக்குனர் குபேந்திரன் பகிர்ந்துள்ளார். “இது ஆண்கள் மீது கவனம் செலுத்துகிறது, குறிப்பாக தங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக இல்லாத பெண்களை புறக்கணிப்பவர்கள் இப்படம் சமர்ப்பணம்.
இந்தப் படம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெறும் உயிர் மட்டுமல்ல எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்கும்படி ஆராய முயற்சிக்கிறது, மேலும் இதற்கு முன்னால் பிறந்த பெண்களுக்கு ஏன் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன, அவை இப்புள்ள பெண்களுக்கு எளிதில் கிடைக்கும் காரணம் என்ன. இப்படம் அப்படிப்பட்ட விஷயத்தை வெளிக்காட்டுகிறது என்று கூறுகிறார் . பெண்களைப் புறக்கணிப்பவர்களிடம் மங்கை எண்ணங்களையும் குற்ற உணர்வையும் தூண்டும் என்று நான் நம்புகிறேன்.” குபேந்திரன் இதற்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் இணை இயக்குனராகவும், உரையாடல் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார், இதில் சமீபத்தில் வெளியான யாரும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் இணைப்புரிந்துள்ளார்.
அவர் ஏன் பெண் சார்ந்த பாடத்தில் அறிமுகமானார் என்பது குறித்து, அவர் கூறுகிறார், “நான் நான்கு சகோதரிகளுடன் மற்றும் பிற பெண்களுடன் வளர்ந்தேன். நான் பார்த்த பெண் சம்பந்தப்பட்ட விஷயம் மற்றும் பெண்கள் இப்பொழுது இருக்கும் நிலைமை கதையைச் சொல்ல வேண்டும் என்று நான் உணர்ந்தேன். நான் திரைக்கதையை எழுதும் போது, கதையை உண்மையானதாக மாற்றுவதற்கு, தெரிந்த சில பெண்களிடம் விவாதித்தேன். ஸ்கிரிப்ட் எழுதும் போது ஆரம்பத்தில் எந்த நடிகரையும் மனதில் கொள்ளவில்லை . “தயாரிப்பாளர்தான் ஆனந்தியை முக்கிய வேடத்தில் நடிக்க பரிந்துரைத்தார்.
அவள் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தினாள், அவள் மிகவும் நன்றாக இப்படத்தில் நடித்திருந்தால். துஷி, ராம்ஸ் மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் துணை நடிகர்களாக உள்ளனர். தமிழில் பெண் என்று பொருள்படும் மங்கை என்பது பெண்களைப் பற்றிய படம் என்பதால் நேரடியான தலைப்பு. ஆனால் டைட்டிலுக்கு அது மட்டும் காரணம் இல்லை என்று இயக்குனர் விளக்குகிறார். தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பில் இருக்கும் இப்படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இப்படத்தை நான் என் மனைவிக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று குபேந்திரன் காமாட்சி அவர்கள் மனைவியை மேடையில் ஏற்றி அவருக்கு சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார், அதை கண்ட அவர் மனைவி பெரும் நெகிழ்ச்சி அடைந்து மேடையிலே கண்கலங்கி அழுதுவிட்டார், உடனே இயக்குனர் அவரை அனைத்து மனைவிக்கு ஆறுதல் கூறி மேடையில் இருந்து கீழே சென்று அமர வைத்தார். இதை கண்ட பட குழுவினரும் கயல் ஆனந்தியும் மனம் நெகிழ்ந்து கண்கலங்கினார்கள்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…