Categories: சினிமா

மல்லிகை பூவை கடித்து சாப்பிட சொன்ன கவிஞர் வாலி… கோபமடைந்து MGR செய்த செயல்…

Spread the love

கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் பணியாற்றிய கவிஞர், திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் கதை ஆசிரியர் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதை தொகுப்புகள் மிகவும் புகழ்பெற்றவை. இது மட்டுமில்லாமல் ஆனந்த விகடன் இதழுக்கு இவர் எழுதிய நினைவு நாடாக்கள் என்ற தொடரும் புகழ்பெற்ற ஒன்றுதான்.

வாலி தமிழ் சினிமாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை என்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் வாலி. கையளவு மனசு என்ற தொலைக்காட்சி தொடரிலும் வாலி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் நிகரற்ற நடிகரும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதருமாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை ஹிட் படங்கள் தான். அதனால் சினிமா வட்டாரங்களில் இவருக்கென்று தனி மரியாதை இருந்தது.

எந்த இயக்குனர்கள் இவரை வைத்து படம் இயக்கினாலும் பாடல் காட்சி என அனைத்தையும் இவரிடம் கலந்து ஆலோசித்து விட்டு தான் தொடங்குவர். கவியரசு கண்ணதாசன் அவர்களும் கவிஞர் வாலி ஆகிய இருவரும் எம் ஜி ஆர் க்கு நெருங்கிய நண்பர்களாவர். அவர் என்ன நினைக்கிறாரோ அப்படியே பாடல்களாக எழுதிக் கொடுப்பவர்கள் இவர்கள் இருவரும் தான். அப்படி ஒரு படத்தின் சூட்டிங் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி இனி காண்போம்.

டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் ஒரு படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக எம்ஜிஆர் நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் கதாநாயகி கோயிலுக்கு வரும்போது கதாநாயகி தலையில் இருக்கும் மல்லிகை பூவை எம்ஜிஆர் எடுத்து சாப்பிடுவது போல் காட்சி படமாக்கப்பட்டது. காட்சி முடிந்ததும் எம்ஜிஆர் வாலியிடம் காட்சி எப்படி இருந்தது என்று கேட்டிருக்கிறார். அதற்கு வாலி நீங்கள் மல்லிகை பூவே இன்னும் நன்றாக மென்று கடித்து சாப்பிட்டு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார் வாலி. உடனே எம்ஜிஆர் அட போயா மல்லிகை பூ எவ்வளவு கசக்குது தெரியுமா என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.

ஐயோ எம்ஜிஆர் கோபித்துக் கொண்டாரோ என்று பின்னாடியே எம்ஜிஆர் இடம் போய் நான் மனதில் பட்டதை தான் சொன்னேன் நீங்கள் கோபப்பட்டு விட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். உடனே எம்ஜிஆர் இல்ல இல்ல நீ என்னுடைய நண்பன் நான் எப்படி கோபப்படுவேன் என்னுடைய நல்லதுக்கு தானே நீ சொல்லி இருக்க என்று சொல்லி அந்த நேரத்திலேயே அந்த காட்சியை மறுபடியும் படம்பிடிக்க வேறொரு ஐடியா செய்திருக்கிறார் எம்ஜிஆர். காட்சியும் படமாக்கப்பட்டு டேக் ஓகே ஆகிவிட்டது. இந்த முறை வாலி சொன்னபடியே பூவை கடித்து சாப்பிட்டு இருக்கிறார் எம்ஜிஆர். ஆனால் அவர் சாப்பிட்டது ரோஜா பூ. இந்த மாதிரி சாமர்த்தியமான காரியங்களை எல்லாம் செய்வதில் வல்லவர் எம் ஜி ஆர்.

admin

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

3 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

14 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

28 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

29 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

30 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

35 minutes ago