#image_title
கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதில் இருந்து பரபரப்பு நிலவுகிறது. கோலிவுட்டில் சிலர் பாலியல் ரீதியாக நடிகைகளை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் பிரபல டாக்டர் கந்தராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் சில நடிகைகள் பட வாய்ப்புக்காக எங்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் மேனேஜர்கள் கட்டாயப்படுத்தி மிரட்டி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அனுப்புகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளனர். இதைப்பற்றி உங்களது கருத்து என்ன என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த கந்தராஜ் இவ்வளவு நாள் இந்த நடிகைகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? அதே மிரட்டல் இத்தனை வருஷமா இருந்துச்சா? அன்னைக்கே சொல்லி இருக்கலாமே.
மிரட்டினால் எங்களால் முடியாதுன்னு சொல்லி இருந்தா அவங்க என்ன பண்ணிருப்பாங்க? கையில இருக்க காசு கொடு இல்லனா கத்தியில குத்திடுவேன் அப்படின்னு சொன்னா அது வேற. உன் கற்ப்பு கொடு அப்படிங்கறது சுலபம் கிடையாது. பெண்ணுடைய சம்மதம் இல்லைனா ஆம்பளையால கிட்ட நெருங்க முடியாது. நான் ஒரு டாக்டர். பல ரேப் கேசுக்கு நாங்க நீதிமன்றத்திற்கு போய் சாட்சி சொல்லணும். பல விபச்சார வழக்குகளுக்கு எங்களுடைய ஆய்வு முக்கியம். இந்த விஷயம் எங்களுக்கு நல்ல தெரியும்.
இதுல ஒரு பெண்ணை கற்பழிக்கிறது அவ்வளவு சுலபம் கிடையாது. மேனேஜர் மிரட்டனாரு நாங்க போனோம் அப்படிங்கறது கிடையாது. அப்போ அவங்க அப்பா அம்மா என்ன பண்ணிட்டு இருந்தாங்க? அவங்களுக்கு சொந்த அண்ணன் தம்பி யாரும் இல்லையா? எல்லா நடிகைகளும் உயிருக்கு பயந்து இருக்காங்களா. பட வாய்ப்புக்காக நிறைய பேர் அக்செப்ட் பண்ணி இருக்காங்களா? கற்பு தான் முக்கியம்னா சினிமாவுக்கு வராதீங்க என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…
சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…
தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…