தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்த விவகம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ததற்கான எந்த வீடியோ ஆதாரமும் இல்லாத நிலையில் அவர் மீது சிறு கீறல் ஏற்பட்டாலும் போலீஸ் தான் பொறுப்பு என்று அவருடைய மனைவி ராணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் அஜித்குமார் லாக்கப் மரணம் போல் ஆகிவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
