#image_title
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கியவர் மணிவண்ணன். இன்றைய இளைஞர்கள் பலருக்கு அவர் ஒரு வெற்றிப்பட இயக்குனர் என்பது தெரியாத தகவலாக இருக்கும். சத்யராஜ், மோகன் மற்றும் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.
கோயம்புத்தூரைப் பூர்விகமாக கொண்ட மணிவண்ணன், நடிகர் சத்யராஜின் கல்லூரித் தோழர். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தை பார்த்த மணிவண்ணன் அந்த படத்தைப் பாராட்டி 50 பக்கத்து மேல் ஒரு விமர்சன மதிப்புரையை அவருக்கு எழுதி அனுப்பியுள்ளார். அதை படித்து பார்த்து வியந்த பாரதிராஜா, அவரை சென்னைக்கு வரவழைத்து தன்னுடைய உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார்.
மணிவண்ணன் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில் தான் இயக்கிய நிழல்கள் படத்துக்கு மணிவண்ணனை கதை வசனம் எழுத வைத்தார் பாரதிராஜா. அந்த படம் தோல்வி படமாக அமையவே மீண்டும் அவரை அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு வசனம் எழுதவைத்து ஹிட் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் மணிவண்ணனை நடிகராக அறிமுகப்படுத்தியதும் பாரதிராஜாதான். தன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கொடி பறக்குது திரைப்படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார்.
#image_title
அதன் பின்னர் அவர் கோபுரங்கள் சாய்வதில்லைப் படம் மூலமாக இயக்குனர் ஆகி 50 படங்கள் வரை இயக்கியுள்ளார். நடிகராகவும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மணிவண்ணன் பற்றி இயக்குனர் கரு பழனியப்பன் பகிர்ந்துள்ள தகவல் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
அதில் “எனக்கு தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்தது இயக்குனர் மணிவண்ணன்தான். அவர் ஒருவர்தான் எந்தவொரு ஜானரிலும் தன்னை அடைத்துக் கொள்ளாமல் எல்லா ஜானரிலும் படம் பண்ணி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அவர் காதல் படம் பண்ணியிருக்கிறார்; அரசியல் படம் பண்ணியிருக்கிரார்; கதாநாயகன் இல்லாமல் படம் பண்ணியிருக்கிறார். இப்படி எல்லா வகை படங்களிலும் அவர் ஒரு சில்வர் ஜூப்ளி படம் வைத்திருக்கிறார்.” எனப் பேசியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…
திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…