“நான் அரசியலையே தொழிலா பண்றவேன்…” தமிழக அரசியல் களத்தை அலற விடும் கராத்தே பாபுவின் தெறிக்கவிடும் டீசர்…!!

By Devi Ramu on தை 24, 2026

Spread the love

நடிகர் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் 34-வது திரைப்படமாக ‘கராத்தே பாபு’ உருவாகியுள்ளது. ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபுவின் இயக்கத்தில், ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரவி முதல்முறையாக அரசியல்வாதியாகவும், கராத்தே பயிற்சியாளராகவும் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழக டிஜிபியின் மகளான தவ்தி ஜிவால் இப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் முதல் பிரதீப் ஆண்டனி வரை பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அனல்பறக்கும் அரசியல் வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, அரசியலைத் தொழிலாகச் செய்பவர்களுக்கும், தொழிலுக்காக அரசியல் செய்பவர்களுக்கும் இடையிலான மோதலைச் சித்தரிக்கும் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளன.