#image_title
தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் படங்களுக்கு பாடல்கள் மட்டும் எழுதாமல் கதை வசனமும் எழுதியுள்ளார்.
அவரின் ஆரம்ப கால பாடல்கள் பெரும்பாலும் எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டவை. அந்த பாடல்களில் கவிரசம் சொட்ட சொட்ட எழுதி ரசிகர்களை தேனில் விழுந்த வண்டை போல கிறங்கடித்திருப்பார். அப்படி ஒரு பாடலைப் பற்றியும் அதில் கண்ணதாசன் பயன்படுத்தியுள்ள ஒரு கவித்துவமான நுட்பத்தையும் பார்க்கலாம். இத்தனை திறமைகள் அவரிடம் இருந்தும் அவரிடம் இருந்த சில தீயப் பழக்கங்களால் அவர் தன்னுடைய 56 வயதிலேயே உயிரிழந்துவிட்டார்.
அவரால் பல இடர்களை அவரை சுற்றியுள்ளவர்கள் சந்தித்தாலும், அவரின் உயரியப் பண்புகளால் அவர் அனைவர் இதயத்தையும் வென்றார். அவர் கடுமையாக விமர்சித்த எம் ஜி ஆர் மற்றும் கலைஞர் கூட அவரை வெறுக்கவில்லை என்பதே அதற்கு சாட்சி.
கண்ணதாசன் புகழின் உச்சியில் இருந்த போது அறிமுகமாகி தனது பாடல்கள் மூலமாக கவனம் பெற்றவர் வாலி. அதனால் கண்ணதாசனுக்கு செல்ல வேண்டிய சில பாடல்கள் மற்றும் படங்கள் வாலிக்கு செல்ல ஆரம்பித்தன. ஆனால் அதை நினைத்து கண்ணதாசன் பொறாமைப் பட்டதேயில்லையாம். இன்னும் சொல்லப்போனால் வாலி எழுதிய பாடல்கள் தனக்குப் பிடித்திருந்தால் தேடிச் சென்று அவரை பாராட்டிய சம்பவங்களும் உண்டாம்.
அப்படி வாலி எழுதிய படகோட்டி படத்தில் இடம்பெறும் தரைமேல் பிறக்கவைத்தான் என்ற பாடல் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த பாடலாம். அந்த பாடலில் வரும் ‘வெள்ளிநிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு’ என்ற வரிகளை கேட்ட கண்ணதாசன், நேராக வாலி தங்கியிருந்த அறைக்குத் தேடிச்சென்று தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அவருக்கு பரிசளித்தாராம்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…