Categories: சினிமா

சந்திரபாபுவால் கம்பெனியை இழுத்து மூடிட்டு அழுத கண்ணதாசன்.. எல்லாத்துக்கும் காரணம் அந்தப் படம் தான்..!

Spread the love

சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ள கண்ணதாசன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் சில படங்களை தயாரித்துள்ளார் என்பதும் பலரும் அறியாத உண்மைதான். கண்ணதாசன் மொத்தம் ஐந்து திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதில் ஒன்றுதான் சந்திரபாபு நடித்த கவலை இல்லாத மனிதன். இந்தத் திரைப்படத்தை தவிர மற்ற படங்கள் எல்லாம் அவருக்கு ஓரளவுக்கு கை கொடுத்தன. ஆனால் கவலை இல்லாத மனிதன் மட்டும்தான் அவருக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. நான் கவலை இல்லாத மனிதன் என்ற படம் எடுத்தேன், ஆனால் பல கவலைகளால் பாதிக்கப்பட்டேன் என்று தனக்கே உரிய கேள்வி மற்றும் நயத்துடன் கண்ணதாசன் ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நாயகன் சந்திரபாபு பல நேரங்களில் படப்பிடிப்புகே வராமல் இருந்ததால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் சந்திரபாபு ஒரு பாடலை பாடிய போதிலும் அவரது பெயர் பாடகர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அதேபோல் இந்த படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதிய தயாரித்த கண்ணதாசனின் பெயர் கூட டைட்டிலில் இடம் பெறவில்லை என்பது ஆச்சரியம் கலந்த வருத்தம். கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சந்திரபாபு நாயகனாக நடித்தார். காமெடி மட்டுமல்லாமல் சீரியஸ் ஆகவும் அவரது கேரக்டர் அமைக்கப்பட்டு இருந்தது.

எம் ஆர் ராதா, டி எஸ் பாலையா, டி ஆர் ராமலிங்கம் ஆகியவருடன் கண்ணதாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சந்திரபாபு சரியாக வராததால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தன்னுடைய திரை வாழ்க்கையில் சந்திரபாபு கஷ்டப்படுத்தியது போல் யாருமே படுத்தியது இல்லை என்று கண்ணதாசனை கூறியுள்ளார். அதேபோல் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த காலத்தில் நான் அழுதது போல் வேறு எந்த காலத்திலும் அழுததில்லை. என்னுடைய பங்காளி வெள்ளை பேப்பர்களில் எல்லாம் கையெழுத்து வாங்கி என்னை பெரிய கடங்காரன் ஆக்கினான். கடைசியில் ஆறு லட்சம் ரூபாய் கடனோடு கம்பெனியை இழுத்து மூடினேன். அந்தப் படத்தால் நான் பொருளாதார கஷ்டத்திற்கு ஆளானது மட்டுமல்லாமல் 39 வழக்குகளையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என கண்ணதாசனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

9 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

9 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

9 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

10 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

10 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

10 மணத்தியாலங்கள் ago