ஐஸ்வர்யா ராய் இல்லையாம்… ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நடிக்க இயக்குனரின் முதல் சாய்ஸ் இந்த பிரபல நடிகை தானாம்… 

By Begam

Updated on:

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை  ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகி பட்டம் வென்றவர் என்பது நாம் அறிந்ததே . இவர்  தமிழில் ஜீன்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அந்த சமயம் மிக பெரிய ஜாம்பவான் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படத்திலும் நடித்திருப்பார்.

   

அதில் அவரது நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. அதன் பின்னர், பாலிவுட்டில் பிரபாலமாக தொடங்கினார். மீண்டும் அங்கு மார்க்கெட் கொஞ்சம் சரிந்ததும், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் சிறப்பான நாடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் மார்க்கெட் உள்ள நடிகையாக வலம் வந்தார் ஐஸ்வர்யா ராய். இறுதியாக இவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவர் நடிப்பில் 2000ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இத்திரைப்படத்தில் மம்மூட்டி, அஜித்குமார், தபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்பொழுது இத்திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கவிருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் கிடையாது என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது, இப்படத்தில் மீனாட்சி எனும் கதாபாத்திரத்தில் பாடகியாக நடித்திருப்பார் ஐஸ்வர்யா ராய்.

ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஐஸ்வர்யா ராய் கிடையாதாம். முதலில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தான் இப்படத்தில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க காமிட்டனராம். ஆனால், சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய்யை மீனாட்சியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் மட்டும்  நடித்திருந்தால் 23 ஆண்டுகளுக்கு முன்னரே அஜித் படத்தில் நடித்திருப்பார் மஞ்சு வாரியார் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.