நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தான் காளியம்மாள். இவருடைய மேடைப் பேச்சுக்கு தனி ரசிகர்கள் பட்டாலும் உண்டு என்று கூறலாம். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்த இருக்கும் முக்கியமான நபர்களில் காளியம்மாள் ஒருவராக பார்க்கப்பட்டார். அக்கட்சியின் சார்பில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்களில் இவரும் ஒருவராக இருந்தார். குறிப்பாக மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். ஆனால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காளியம்மாள் இடையே மோதல் ஏற்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் திடீரென விலகினார்.
அதன்பிறகு அவர் பல்வேறு கட்சிகளில் இணைய போவதாக அடிக்கடி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் எந்த முடிவையும் காளியம்மாள் வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சி இடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று பல தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது புது தகவலாக அவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைய ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் வேல்முருகனுக்காக சென்னையில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. இதனால் அவர் எந்த கட்சியில் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
