தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார். சமீபத்தில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு அரசியலில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தாலும் அதனை சட்டரீதியாக கையாண்டு வரும் விஜய் தனது கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அதேசமயம் கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் சேலத்தில் தனது தேர்தல் பரப்புரையை மீண்டும் விஜய் தொடங்க உள்ளார். அதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் பல்வேறு யூகங்களுக்குப் பிறகு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாற்றுக் கட்சியில் இருந்து வரும் நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைப்பதற்கு விஜய் சற்று தயக்கம் காட்டி வரும் நிலையில் அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது தேர்தல் நெருங்க நெருங்க மாற்றுக் கட்சியினர் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
அந்த வகையில் காளியம்மாள் உடன் டீலிங் முடிந்துள்ளதாகவும் அவர் விரைவில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்சிக்குள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காளியம்மாளை கட்சிக்குள் நுழைக்க விஜய் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் SIR பணிகளுக்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் நடத்திய போராட்டத்தில் பெண் நிர்வாகிகளின் பேச்சு கட்சிக்கு வலு சேர்த்த நிலையில் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சியில் விஜய் இறங்கியுள்ளார். அதன்படி சிறந்த பேச்சாளரான காளியம்மாளை கட்சியில் களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த வாக்குகளையும் கணக்கு போட்டு விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…