இன்னும் 4 நாட்கள் மட்டுமே…. ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் சில காரணங்களுக்காக பலருடைய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டது. அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பித்து வருகிறார்கள்.

கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் தற்போது வரை 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். அதில் தகுதியான பெண்களை தேர்வு செய்யும் பணியை அரசு தற்போது தொடங்கியுள்ளது. ஊராட்சி வாரியாக விண்ணப்பித்த அவர்களின் தகுதிகள் தற்போது சரிபார்க்கப்படுகின்றன.

   

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயணங்களை சேர்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வருகின்ற டிசம்பர் 15 முதல் அவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட உள்ள நிலையில் இன்னும் நான்கு நாட்களில் அதாவது நவம்பர் 15 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் முழுவதுமாக நிறைவடையும் என அரசு தெரிவித்துள்ளது. அதன் பிறகு மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதால் தகுதியான பெண்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.