நவீன தமிழ் சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1964 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படத்தில் முத்துராமன், நாகேஷ், ராஜஸ்ரீ, ரவிச்சந்திரன் மற்றும் காஞ்சனா போன்ற பழம் பெரும் நடிகர்கள் பலரும் நடித்திருந்தனர். கடந்த 1964 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் அந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையின் காதலிக்க நேரமில்லை பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

குறிப்பாக விஸ்வநாதன் வேலை வேணும், அனுபவம் புதுமை, உங்க பொன்னான கைகள், நாளம் நாளம் திருநாளாம் போன்ற பாடல்கள் காலத்திற்கும் பேசப்படும் பாடல்களாக அமைந்தன. இதில் அனுபவம் புதுமை என்ற பாடலில் ராஜ ஸ்ரீயின் அசத்தலான நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. தொடர்ந்து 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெள்ளிவிழா கண்டது. ஆனால் படத்தின் இத்தனை சாதனைகளுக்கு முன்னாலும் பெரிய போராட்டத்தை இயக்குனர் ஸ்ரீதர் சந்தித்துள்ளார். அதாவது ஸ்ரீதர் படத்திற்கான கதையை எழுதி முதலில் பத்து நாட்கள் ஷூட்டிங் நடத்தியுள்ளார்.

பிறகு அந்த காட்சிகளை பார்த்த போது அவருக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை அப்படியே தூக்கி எறிந்து விட்டு மீண்டும் ஒரு புதிய கதையை எழுதி படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். அந்த கதை தான் பின்னாடி படமாக உருவானது. காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியான போது இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோது இந்த திரைப்படம் குறித்து சட்டசபையில் கேள்வி எழுந்தது. அதாவது படத்தின் பெயரிலும் ஆபாசமுள்ளது அதனைப் போலவே படத்தில் உள்ள சில காட்சிகளிலும் ஆபாசம் இருப்பதால் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்கலாமா என்று பல விவாதங்கள் எழுந்தது.

சட்டசபையில் ஒரு உறுப்பினர் இது குறித்து கேள்வி எழுப்பிய போது படத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். என் பெயரிலும் படத்தில் உள்ள சில காட்சிகளிலும் கவர்ச்சி இருக்கிறதே தவிர ஆனால் எந்த ஒரு இடத்திலும் ஆபாசமில்லை என்று கூறி பலரும் ஆதரவாக குரல் கொடுத்தனர். அதன் பிறகு தமிழக முழுவதும் திரைப்படம் வெளியாகி ஓடிய நிலையில் சட்டசபையில் எழுந்த விவாதமும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது என்று சொல்லலாம். அந்த காலத்திலேயே இந்த திரைப்படம் வெள்ளி விழா கண்டது குறிப்பிடத்தக்கது.
