ரிப்போர்ட் ரெடி… கரூர் சம்பவத்தில் யாரும் எதிர்பாரா திருப்பம்…. செம ஷாக்கில் விஜய்…!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறது. அதேசமயம் இந்த சம்பவத்தில் விஜய்க்கு எதிராகவும் சாதகமாகவும் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் கரூர் எஸ்பி அலுவலகத்தில் ஐஜி அஸ்ரா கார்க் ஆலோசனை நடத்திய நிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விஜய் பரப்புரைக்கு வழங்கப்பட்ட அனுமதி, நிபந்தனைகள் அடங்கிய கோப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றி கழகம் சார்பில் கேட்கப்பட்ட இடங்கள், பரப்புரையில் வழங்கப்பட்ட பாதுகாப்பு பணி உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த விசாரணையில் தமிழக வெற்றிக் கழகம் விஜய்க்கு எதிராக பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் தரப்பினர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.