“48 நாட்கள் கெடு… இந்த 3 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது”…. இனிமே ஆட்டம் வேற மாதிரி இருக்கும்..!

By Nanthini on தை 24, 2026

Spread the love

நிழல் கிரகங்களின் சஞ்சாரமும் கோள்களின் இடப்பெயர்ச்சியும் மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், வரும் மார்ச் 11-ம் தேதி முதல் குரு பகவான் மிதுன ராசியில் தனது வக்ர நிலையிலிருந்து மாறி, நேர்க்கதியில் (Direct Motion) பயணிக்கத் தொடங்குகிறார். அறிவு, செல்வம் மற்றும் சுப காரியங்களுக்கு அதிபதியான குருவின் இந்த நேரடி சஞ்சாரம், அடுத்த 48 நாட்களுக்கு சில ராசியினருக்கு பொற்காலமாக அமையப் போகிறது.

இந்த குரு பெயர்ச்சியால் பெரும் பலன்களைப் பெறப்போகும் ராசிகளில் ரிஷப ராசி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ரிஷப ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் குடும்ப உறவுகள் மேம்படுவதுடன், தடைபட்டிருந்த சுப காரியங்கள் கைகூடும். குறிப்பாக, வணிகம் மற்றும் தொழில் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபமும், புதிய முதலீடுகளில் நன்மைகளும் உண்டாகும். குருவின் அருளால் பொருளாதார நிலை உயர்ந்து மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

   

சிம்ம ராசியினரைப் பொறுத்தவரை, குருவின் இந்த நேரடிப் பயணம் தொழில் ரீதியான முன்னேற்றத்தை அள்ளித் தரப்போகிறது. இதுவரை வேலையில் இருந்த தடைகள் நீங்கி, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். நிதி நிலைமையை வலுப்படுத்த பல புதிய வழிகள் பிறக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைப்பதோடு, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும் அதிர்ஷ்டக் காலமாக இது அமையும்.

   

மீன ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி ராஜயோகத்தை வழங்கவுள்ளது. செல்வம் பெருகும் வாய்ப்புகள் உண்டாவதுடன், தொழிலில் பெரும் வெற்றியைக் காண்பார்கள். ஆன்மீகப் பயணங்கள் மற்றும் மத யாத்திரைகள் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். குருவின் அருளை முழுமையாகப் பெற வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.