ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு..! கரன்சி நோட்டு அச்சகத்தில் 84 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க உடனே முந்துங்கள்..!!

By Soundarya on வைகாசி 18, 2026

Spread the love

இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நாசிக் கரன்சி நோட்டு அச்சகத்தில் (CNP Nashik) காலியாக உள்ள சூபர்வைசர், அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 84 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ (ITI), டிப்ளமோ (Diploma), ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) அல்லது முதுகலை பட்டப்படிப்பு (PG) முடித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்; இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு வழக்கமான வயதுத் தளர்வு வழங்கப்படும்.

இப்பணிகளுக்குத் தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு (Skill Test) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதிப் பட்டியலின்படி தேர்வு செய்யப்படுவர். இந்த மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், www.cnpnashik.spmcil.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் 19.05.2026 என்பதால், காலதாமதமின்றி உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.