தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் தங்க நகை கடன் ஒரு கிராமுக்கு 6000 ரூபாயில் இருந்து 7000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இந்த அறிவிப்பு அவசரப்பான தேவைக்காக நகைகளை அடகு வைப்பவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. தமிழகத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் என்று பல்லாயிரக்கணக்கான கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அவசர பண தேவை ஏற்படும் சமயத்தில் அதிக ஆவணங்கள் மற்றும் சிக்கலான நடைமுறைகள் இன்றி மிக எளிதில் கடன் பெற முடிவதால் பெரும்பாலானோர் நகை கடனுக்காக கூட்டுறவு வங்கிகளை நாடுகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்திய சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராமுக்கு 6000 ரூபாய் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 7000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…
தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…
நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…