குஷியோ குஷி..! கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசின் மகிழ்ச்சி செய்தி…!!

By Soundarya on ஆனி 14, 2026

Spread the love

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரிசர்வ் வங்கி (RBI) விதிகளுக்கு உட்பட்டு, அதிகபட்சமாக முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அறிவிக்கப்பட்ட ₹50,000 வரையிலான கடன் தள்ளுபடி திட்டம் தற்பொழுது மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய மாற்றங்கள் மற்றும் முழுத் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி, கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். விவசாயிகளின் இந்தத் தீவிரமான போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை அடுத்தே, அரசு தனது முந்தைய திட்டத்தை மாற்றி அமைத்து இந்த அதிரடி முடிவை எடுக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

   

அரசின் இந்த புதிய அறிவிப்பு மற்றும் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இது போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கடன் தள்ளுபடி நடவடிக்கையானது தமிழக விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைப் பெருமளவில் குறைக்கும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.