ஹாட்ரிக் தோல்வியால் விரக்தியில் “ஜெயம் ரவி”.. விரைவில் ரிலீசாகும் அடுத்த படம்.. மலைபோல நம்பியிருக்கும் வெர்ஸ்டைல் ஹீரோ..

By Ranjith Kumar on மாசி 27, 2024

Spread the love

2010 காலகட்டங்களில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ஜெயம் ரவி. அவர் ஆரம்ப காலத்து காலகட்டத்தில் ஜெயம், தில்லாலங்கடி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து வெற்றி நாயகனாக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பின்னதாக அவருக்கு சரியாக சில படங்கள் அமையாமல் சென்று கொண்டிருந்தது,

அதன் பின்னதாக பல வருடங்களுக்குப் பிறகு பெரிய இயக்குனருடன் கைகோர்த்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தால் ஜெயம் ரவி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் போன்ற பல பிரபாகங்கள் நடித்து இந்தியா முழுவதும் பான் இந்தியா மூவியாக மாறி சினிமா துறையை திரும்பிப் பார்க்க வைத்த படம் தான் பொன்னியின் செல்வன்.

   

ராஜ ராஜ சோழனின் கதையை எழுதிய கவிஞரும் எழுத்தாளருமான கல்கி அவர்களின் படைப்பில் உருவாகிய பொன்னின் செல்வன் கதையே மையமாக வைத்து இயக்கப்பட்ட படம் தான் இது, இந்த படம் ஜெயம் ரவி அவர்களுக்கு மாபெரும் வெற்றியை தந்தது, அதன் பின்னதாக அவர் படங்கள் மேல் படங்களாக வந்து குவிந்த வண்ணமாக இருந்தது, ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, கடைசியாக பொன்னின் செல்வன் தான் அவருக்கு வெற்றியை கொடுத்தது, அதன் பின் வந்த படங்கள் இறைவன், சைரன், அகிலன் இந்த மூணு படமும் அவருக்கு வசூல் ரீதியாக சரி, விமர்சன ரீதியாகவும் சரி தரையை தொட்டது தான் என்று சொல்ல வேண்டும்.

   

இப்படி வரிசையாக தோல்வி படமாக கொடுத்து ஆற்றிக் அடித்த தோல்வி நாயகன் என்று பட்டத்தை பெற்று விட்டார், ஒரு காலத்தில் இவர் ஆற்றி கடித்து வெற்றி நாயகனாக வலம் வந்த இவர், இப்பொழுது இவர் நிலை மாறிவிட்டது. இதன் பின்னதாக வரும் கிருத்திகா உதயநிதி அவர்களின் இயக்கத்தில் “காதலிக்க நேரமில்லை” என்ற படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் அவர்கள் நடிப்பல் வரும் மே மாதம் வெளியாக உள்ளது,

 

இப்படம் ஓரளவுக்கு இவருக்கு பெயரை பெற்று கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னதாக இவர் அண்ணன் மோகன்ராஜ் அவர்களில் இயக்கத்தில் தனி ஒருவன் 2 படம் கூடிய விரைவில் இயக்கப்பட்டு வெளியாகும் என்று தெரிய தெரிவித்து இருக்கிறார். அப்படமும் இவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.