மறைந்த நடிகர் மாரிமுத்துவின் பிள்ளைகளை படிக்க வைத்தது இந்த பிரபல நடிகரா?… அவரது தம்பி கூறிய ஷாக்கிங் தகவல்…

By Begam

Updated on:

தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

   

 

இந்நிலையில் நேற்று எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பணியின் போது மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலமாக புறப்பட்டு தகனம் செய்யப்பட்டு விட்டது.  நடிகர் மாரிமுத்து தனது சொந்த மாமன் மகளான பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

 

அதில் நடிகர் மாரிமுத்துவின் தம்பியான ரவிச்சந்திரன், அவரை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் மாரிமுத்துவின் பிள்ளைகளை படிக்க வைத்தது நடிகர் அஜித் என கூறி புது ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளார். நடிகர் மாரிமுத்து இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான அஜித்தின் ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.  அப்போதிலிருந்தே நடிகர் அஜித்துக்கு பரிட்சையமான மாரிமுத்து, தனது பிள்ளைகளை படிக்க வைக்க கூட கஷ்டப்பட்டுள்ளார்.

அதையறிந்த அஜித், மாரிமுத்துவின் மகன் மற்றும் மகள் இருவரையும் ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு அஜித் தான் செலவு செய்து படிக்க வைத்துள்ளாராம். தற்போது இந்த செய்தியை மாரிமுத்துவின் தம்பி ரவிச்சந்திரன் கூறியதையடுத்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். நடிகர் அஜித் எப்பொழுதும் பிறருக்கு உதவக்கூடிய மனம் படைத்தவர். இவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியாவிட்டாலும், அவரால் பலனடைந்த ஏகப்பட்ட பிரபலங்கள் அவ்வப்பொழுது பேட்டிகளில் கூறி வருகின்றனர்.