ஷாலினியை திருமணம் செய்ய ஒரு கோடி ரூபாய் தந்தாரா அஜீத்குமார் – மகளை கரம்பிடிக்க இப்படி ஒரு நிபந்தனை விதித்தாரா ஷாலினி அப்பா?

By Sumathi

Updated on:

நடிகர் அஜீத்குமார், இன்று தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் வரிசையில் ஒருவராக இருக்கிறார். டாப் ஸ்டார்கள் 4 பேரில் ஒருவராக வலம் வருகிறார். ஆனால் மிகப்பெரிய பிரபல நடிகராக இருந்தாலும் தனது மனைவி, பிள்ளைகள், குடும்பத்தை அவர் மறைத்ததில்லை. எல்லா இடங்களிலும் அவரோடு சென்று வருகிறார். கேரளா, கொல்லம் பகுதியை சேர்ந்தவர் பாபு மகள்தான் ஷாலினி. சினிமாவில் பாடராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை குடும்பத்துடன் வந்தவர்தான் பாபு. ஒரு கட்டத்தில் பாடகராக முடியாமல், காஸ்ட்யூம் டிசைனர் ஒருவரது உதவியாளராக இருந்திருக்கிறார் பாபு.

Shalini

   

ஒருமுறை கேரளா சென்ற போது, பாபுவின் பர்ஸில் இருந்து விழுந்த ஷாலினியின் புகைப்படத்தை அங்கிருந்த புரடக்சன் மேனேஜர் ஒருவர் பார்த்திருக்கிறார். அப்போது குழந்தை நட்சத்திரம் ஒருவர் தேவை என மலையாள டைரக்டர் பாசில் தேடிக்கொண்டிருந்த நிலையில், ஷாலினிக்கு அவரது படத்தில் முதன்முறையாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. தொடர்ந்து மலையாளத்திலும், சங்கர் குரு போன்ற படங்களில் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினியால், குடும்பம் பொருளாதார ரீதியாக சற்று உயர்ந்தது.

இதற்கிடையே மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில், ஷாலினியின் தங்கை ஷாம்லியும் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ராஜா சின்ன ரோஜா படத்துக்கு பிறகு அதிகமாக நடிக்காத ஷாலினி, மீண்டும் பாசில் அறிமுகத்தில் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்த ஷாலினி, அமர்க்களம் படத்தில் அஜீத்குமாருடன் நடித்தார்.

Shalini

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் கூறிய சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, சரண் இயக்கத்தில் அஜீத், ஷாலினி அமர்க்களம் படத்தில் நடித்த போது ஷாலினி மீது அஜீத் காதல் கொண்டார். ஷாலினியும் காதலை ஏற்றுக்கொண்ட நிலையில், மதத்தையும் கடந்து அவர்களது காதல் ஜெயித்தது. ஆனால் ஷாலினியை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றால், ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என, அஜீத்திடம் ஷாலினியின் தந்தை பாபு பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், எந்தளவுக்கு அது உண்மையான தகவல் என்று தெரியவில்லை. திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்த்த நிலையில், 10 பொருத்தமும் சரியாக இருந்துள்ளது. அஜீத், ஷாலினி இருவருக்கும் இடையே உள்ள புரிதல் அவர்களை சிறந்த தம்பதியராக அழகாக வாழச் செய்கிறது என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

author avatar
Sumathi