“காதுக்குள் யாரோ அழைக்கிறாங்க…” என்னை மன்னிச்சிரு தம்பி…! ஐடி ஊழியரை கண்டு கதறி அழுத பெற்றோர்…. பரபரப்பு பின்னணி…!!

Spread the love

சென்னை, மேற்கு முகப்பேர் திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ரோஷன் நாராயணன் (24) என்ற இளைஞர், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவரது குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி கோயிலுக்குச் சென்றிருந்தபோது, ரோஷன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இன்று அதிகாலை குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், ஜன்னல் வழியாகப் பார்த்தனர். அப்போது ரோஷன் நாராயணன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அவரை மீட்டுப் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நொளம்பூர் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரோஷன் நாராயணன் இருந்த அறையைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு கடிதம் சிக்கியது.

அந்தக் கடிதத்தில், “தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல ஓர் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாகவும், இதனால் மன உளைச்சல் அதிகரிப்பதாகவும் எழுதியிருந்தார். மேலும், தனது சகோதரரிடம் சண்டையிட்டதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, பெற்றோர் தன்னை மன்னித்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். போலீசார் அவரது கைபேசியைக் கைப்பற்றி, தற்கொலைக்கான சரியான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

56 minutes ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

57 minutes ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

1 மணத்தியாலம் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

2 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

2 மணத்தியாலங்கள் ago