அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (TRUTH Social) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புதிய புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில், அமெரிக்க கடற்படைத் தளபதியுடன் டிரம்ப் கடலின் நடுவே நிற்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
மேலும், அதற்கு கீழே “புயலுக்கு முந்தைய அமைதி” (Quiet before the storm) என்றும் அவர் மர்மமான முறையில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்தத் பதிவு ஈரானை குறிவைத்து ஒரு மிகப்பெரிய இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டமாக இருக்கலாம் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு போர் வெடிப்பதற்கான ஆரம்ப அறிகுறி இதுவென்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
