தமிழ் சினிமாவில் துணை நடிகராக புகழ் பெற்ற நடிகராக பணியாற்றியவர் சத்யராஜ். 1980 மற்றும் 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் சத்யராஜ். இவரது இயற்பெயர் சத்யராஜ் சுப்பையன் மற்றும் இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஆவார்.

ஆரம்பத்தில் குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்து கொண்டிருந்த சத்யராஜ் பின்னர் தனது கல்லூரி கால நண்பர் மணிவண்ணன் சினிமாவிற்குள் வந்ததற்கு பிறகு பிரபலமானார். ஏனென்றால் மணிவண்ணன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்து புகழ்பெற்றார் சத்யராஜ். அடுத்ததாக விஜய் அஜித் ஆகியோரின் வருகையால் 2000 காலகட்டத்திற்கு பிறகு மார்க்கெட் சரிய தொடங்கியதால் துணை கதாபாத்திரம் குணசித்திர கதாபாத்திரம் ஆகியவற்றை ஏற்று நடிக்க ஆரம்பித்தார் சத்யராஜ்.
சத்யராஜை இந்திய அளவில் பிரபலமடையச் செய்தது பாகுபலி திரைப்படம் தான். பாகுபலி கட்டப்பாக தனது அபரமாக நடிப்பை வெளிப்படுத்தி புகழின் உச்சிக்கு சென்றார் சத்யராஜ். தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சத்யராஜ். சமீபத்தில் சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா தனது அம்மா நான்கு வருடமாக கோமாவில் இருப்பதாகவும் அவர் சீக்கிரம் மீண்டு வருவார் என நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்று கூறியிருந்தார். அதைப்பற்றி ஒரு நேர்காணல் கலந்து கொண்ட சத்யராஜ் விளக்கம் அளித்திருக்கிறார்.

சத்யராஜ் கூறியது என்னவென்றால் நான் சாமியை விரும்பமாட்டேன் சாமி கும்பிடாததனாலதான் உன் மனைவி இப்படி ஆயிட்டா அப்படின்னு சொல்றாங்க. ஏன் சாமி கும்பிடணும்னு போறாங்க குடும்பம் குடும்பமா கோவிலுக்கு போறாங்க ஏன் போற இடத்துல அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகிறது இல்லையா இல்ல சாமி கும்பிடுறவங்க வீட்ல யாருமே சாகறது இல்லையா உடம்பு சரி இல்லாம போறதில்லையா தற்கொலை பண்ணிக்கலையா எல்லோருக்கும் எல்லாம் நடக்கத்தான் செய்கிறது. வாழ்க்கையில் நல்லது இருந்தா கஷ்டமும் இருக்கும் அதை நாம் கடந்து செல்வதற்கும் சமாளிப்பதற்கும் பழகிக்கணும் என்று பேசி இருக்கிறார் சத்யராஜ்.
